கடிதம் 03 - இந்திரா கிறுக்கல்கள்
இடம் : சென்னை, நாள் : 15-12-2017 அன்புள்ள இந்திரா கிறுக்கல்கள் அவர்களுக்கு, வணக்கம், இந்த வாரத்தின் இரண்டாம் நாளில் சென்னை சத்தியம் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்த ‘அருவி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு நண்பர்கள் கவிமணி, யமுனைச் செல்வன் ஆகிய இருவரோடும் சென்றிருந்தேன். முன்பாகவே இதுபோலான இரண்டு திரையிடல்களிலும் கலந்துகொள்ள முடியாமலிருந்ததால் படம் பார்த்த பலரும் ‘அட்டகாசம்’ என்ற வார்த்தைக்கு மேல் எதையும் சொல்லாமல் விட்டது மேலும் ஒரு எந்துசியஸத்தை வளர்த்தெடுத்திருந்தது. ஒரு சமூகத்தின் பண்பாடு எத்தகையது என்பதை அறிந்துகொள்ளுவதற்கான உபாயம், பெண்பால் ஒருத்திக்கு அந்தச் சமூகம் எத்தகைய இடம் அளிக்கிறதோ அதுவே, அச் சமூகத்தின் பண்புக்கு அறிகுறி என்று சித்பவானந்தா எழுதிய மஹாபாரத நூலின் முன்னுரையில் எழுதியிருந்ததை நேற்றைக்கு இரவு வாசித்திருந்தே