Posts

Showing posts from March, 2016

அன்னதோர் சொல் : அஸ்தினாபுரம் | ஜோ டி குருஸ்

Image
                வாழ்க்கை அவரவரது போராட்டங்களால் ஆனது. நிரைந்து ததும்புகிற மனத்தோடு வாழ்க்கைப்பாடுகளின் பின்னோக்கிப் பார்க்கிறபோது அத்தனையும் ஊழ் என்று வலியுறுத்துகிறது இந்தப் போர்க்களம். எத்தனையோ இடர்களை சிலுவைகள் போல் சுமந்துகொண்டே வாள்களைச் சுழற்றி முன்னேறுகிறோம். யுத்தத்தின் பெருங்குரல்  உள்ளே கிடந்து அரற்றிக்கொண்டே இருக்கிறதை மறைத்தபடி... அஸ்தினாபுரம் தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் நேரடியாக எந்தக் களத்தொடர்பும் இல்லை. ஆனாலும் முழுமொத்தப் பக்கங்களில் உருளும் பகடைகளைக் காண்கிறபோது அஸ்தினாபுரம் என்ற தலைப்பு நிகரற்றதாய் பிணைந்து கொள்கிறது.  கொற்கை நிலத்தில் ஆமந்துறையில் பிறந்து, முதல் மனைவியின் கடூரத்தினால் வாழ்க்கைப் பாதையில் புரட்டியெடுக்கப்பட்ட அமுதனுக்கு, தொண்டை மண்டலத்தில் செம்மாங்குப்பத்தில் வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் இளையவளாகப் பிறந்து, ‘வழக்கு முடியும் வரை நீ யாரென்று யாரும் கேட்டால் வேலைக்காரி என்றுவிடுகிறேன்’ எனச் சொல்லி மாலை மாற்றிக்கொள்ளும் புதுமனைவி ஆனந்தியின் அறிமுகத்தோடு தொடங்குகிறது அத்தினாபுரத்துப் பயணம். அடிப்படையில் கடற்கரைக்காரனாகப் பி

ஆரஞ்சுமுட்டாய் நூல் அறிமுகக்கூட்டம் | பொள்ளாச்சி இலக்கியவட்டம்

Image
பொ ள்ளாச்சி வந்திறங்கியபோது மணி ஏழு சுமார் இருந்தது. பூபாலன் ஏற்கனவே அறைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பழைய சுண்ணக் காரை கட்டிடத்தை தெளிவாக சீர்திருத்தி விடுதியாக்கி வைத்திருந்தார்கள். அறையின் குளிர்ச்சியில் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் குளித்து புறப்பட்டு பக்காவாக ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்குப் போகிற தொனியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். இந்தமுறை நகரத்தார் சங்கத் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 35வது நிகழ்ச்சி இது. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் ஒவ்வொரு மாதமும் சலிக்காமல் மூன்றாண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கீதாபிரகாஷ் என்கிற நடன ஆசிரியை கவிஞராகப் பரிணமிக்கிற நிகழ்வோடு சேர்த்து என்னுடைய புத்தகத்திற்குமான அறிமுகக்கூட்டம் இது. நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போதே பூபாலனிடமும் பிறகு அம்சபிரியா அவர்களிடமும் அட்டண்டன்ஸைப் போட்டுவிட்டு வாகாகக் கிடைத்த சேரில்ப்போய் உட்கார்ந்துகொண்டேன். கவிஞர் ஆன்மன் பக்கத்தில் இருந்தார். கடங்கநேரியானின் சொக்கப்பனை கூட்டத்தில் அவருக்கு என்னைத்

கொலைச் சொல்

Image
கொலைச் சொல்             ஆர்.வி.தோட்டத்தில் கணேசன் வீடு எது என்று விசாரித்தபோது,  பெட்டிக்கடைக்காரர் சாதாரணமாகத்தான் வழிசொன்னார். ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்துக்கொண்டே, “அவர் வீட்டுக்கு யாராவது புதிய ஆள் வந்திருக்கிறாரா” என்று கேட்டேன். கொஞ்சம் மோசமான சூழ்நிலையாக இருந்தால் என்கேள்வியின் அர்த்தமே மாறிப்போய்விடும். இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை. சங்கர் இங்கேதான் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் அந்தக் கேள்வியை சாதாரணமாக கடைக்காரரிடம் தொடுத்தேன்.  அவருக்கு கணேசனைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடும் அவன் வீட்டுக்கு வந்துபோகிறவர்கள்.. குறைந்தபட்சம் கண் முக்கியமாக அவன் சிறையிலிருக்கிற காலங்களைப் பற்றியாவது... நான் எதிர்ப்பார்த்ததுபோலவே அவரிடமிருந்து சங்கரின் அங்க அடையாளங்களோடு பொருந்துகிற ஒரு ஆள் ஒருவன் கணேசன் வீட்டில் இரண்டுநாளாகத் தென்படுவதுபற்றி தகவல் கிடைத்தது. அத்தோடு விடாமல் அந்தப்பையனை எங்கயோ பார்த்தமாதிரி இருந்தது என்று அவரே பேச்சை வளர்க்கத் தொடங்கினார். ஆனால் அதற்கு நான் தயாராக இல்லை. பேச்சுவாக்கில் நான் யார் என்பதையும், சங்கர் யார் என்பதையும் அவர் அறிந்துகொண்டால

வெட்டும்பெருமாள் - சிறுகதை

Image
                இ துநாள் வரைக்கும் எழுதிக் கிழித்ததில் உருப்படியாக ஒரு கதையைக் காட்டு பார்க்கலாம் என்று யாராவது கேட்டால், சட்டென்று ஒருகனமும் தயங்காமல் வெட்டும்பெருமாள் சிறுகதையைக் கொடுத்து படித்துவிட்டுச் சொல்லுங்கள் என்பேன்.. ஆம், அந்தக்கதை எனக்குச் செய்த காரியங்கள் ஒன்றிரண்டல்ல ஏராளமானவை.   அசமந்தமாக இருந்த ஒரு சாயங்காலப் பொழுதில் கணினியின் முன்னால் உட்கார்ந்துகொண்டு மனதுக்குள் ஓடிய வெட்டும்பெருமாளின் கதையை எழுதி முடித்தேன். கதை முடிவை நெருங்கும்போது நள்ளிரவு தொட்டிருந்தது. எப்போதுமே என்ன கதை எழுதப்போகிறோம் என்ற முன்முடிவுகள் ஏதும் வைத்துக்கொள்ளாமல் ஒரு சொல்லி இருந்து தொடங்குவது என் பழக்கம். கதாப்பாத்திரங்களின் பெயர்களாக அன்றைக்கு புத்திக்குள் வந்தவர்களைத் தேர்வு செய்துகொள்வது. இப்படித்தான் இப்போதும் வண்டி ஓடுகிறது. சரி கதைக்குவருவோம். வெட்டும்பெருமாள் பெயரை உச்சரிக்கும்போதே உள்ளுக்குள்  ஒரு பரவசம் உண்டானது எனக்குள். அது என்னுடன் படித்த என் நண்பனது பெயர். சேரன்மாதேவிக்காரன். மலைக்காடுகளில் மாடுமேய்த்துக் கொண்டே பாளையங்கோட்டைப் பள்ளிக்கூடத்திற்கு வந்து படித்துக் கொண

நீர்ப்பெயற் றெல்லைப் போய் வந்தோம் | மாமல்லபுரம் பயண அனுபவங்கள்

Image
நீர்ப்பெயற் றெல்லை - மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்             வ ழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை ஊர்சுற்றல் பதிவாகத்தான் இது இருந்திருக்கும். ஆனால், எங்கள் பயண திசை மாறியதால் பதிவின் தன்மையையே மாறிவிட்டது. ஆம் நண்பர்களோடு சென்னையின் வடஎல்லையில் இருக்கும் பழவேற்காட்டுக்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு குழுவைத் திரட்டினோம். ஆனால் அத்தனை பயல்களும் டேக்கா காட்டிவிட, நானும் நண்பர் கேசவனும் மட்டும் மிச்சமானோம்.  சரி சமைத்துச் சாப்பிட்டுத் தூங்குவோம் என்று கேசவனிடம் அறைக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க அவரும் வந்துவிட்டார்.           அப்போதுதான் பனுவலில் இன்றைக்கு மாமல்லபுரம் தொல்லியல்துறை கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று கேசவன் நினைவுபடுத்தினார். அட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை என்றால் எப்படி என்று டேங்கை நிரப்பிக்கொண்டு கேமிராவும் கையுமாக ஈசிஆர் வழியாக தெற்குதிசையில் மாமல்லபுரம் விரைந்தோம்.        மாமல்லபுரத்திற்கு 5.கி.மீ முன்பே சாளுவன்குப்பம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது புலிக்குகை. வெள்ளை நிற பேருந்தைப் பார்த்ததும் இங்கேதான் நம்மவர்கள் இருக்